புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_m10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10 
69 Posts - 52%
heezulia
நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_m10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_m10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_m10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_m10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_m10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_m10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_m10நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 16, 2011 9:29 am

பட்டயக் கணக்காளர் (சார்ட்டட் அக்கவுண்டன்ட்) படிப்பானது ஏனைய எல்லா நிதித் துறை சார்ந்த படிப்புகளையும் விட தனித்துவம் வாய்ந்தது, மரியாதைக்கு உரியது. இந்தப் படிப்புக்கு இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பும், சம்பளமும் காத்துக்கொண்டிருக்கிறது. பிற மேல்படிப்புகளை ஒப்பிடும்போது இந்தப் படிப்புக்கான செலவு மிக மிகக் குறைவு. ஆனால் கிடைக்கும் மதிப்பு மிக அதிகம். சம்பளத்தைப் பொறுத்தவரை மாதம் ரூ. 50 ஆயிரம் முதல் திறமைக்கு ஏற்றவாறு பெறலாம்.

சி.ஏ. தேர்வில் வெற்றி பெறுவது எளிதல்ல என்று பரவலாக ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. சரியான முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் உங்கள் காலடியில். பொதுவாக நமது மாணவர்கள் சி.ஏ. படிப்பில் அதிக ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. பெற்றோர்களும் தமது பிள்ளைகளை சி.ஏ. படிக்கத் தூண்டுவதில்லை. `சி.ஏ. படித்து முடிக்க முடியாது. மிகவும் கடினம்' என்பது பெற்றோர் மத்தியில் நிலைபெற்றுள்ள கருத்து. நமது திறமையை நாமே உணராமல் இருப்பதால் எழுவது இக்கருத்து.

`உரசிப் பார்த்தால்தான் தங்கமா, பித்தளையா என்று தெரியும்' என்று ஒரு பழமொழி கூறுவார்கள். துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் பாதுகாப்பாகத்தான் இருக்கும். ஆனால் கப்பல் அதற்காகக் கட்டப்படவில்லை. கடலில் பயணிக்கும்போதுதான் புதிய தேசங்களை எட்ட முடியும். அதுபோல படிப்புக் கடலில் இறங்கினால்தான் சாதனைப் பிரதேசங்களை அடைய முடியும்.

பட்டயக் கணக்காளர் படிப்புப் படிக்க விரும்பும் மாணவர்கள், புரிந்து படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் மனப்பாடம் செய்யப் பழக்கப்பட்ட நமது மாணவர்கள் இதைக் கடினமாகக் கருதுகிறார்கள்.

சரி, பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) படிப்புக்கான படி நிலைகளைப் பார்க்கலாமா...

1. பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்ச்சி பெற்றவர்கள் ’காமன் புரொபசியன்சி டெஸ்ட்' (CPT)-ல் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

2. பிளஸ் 2 அல்லது அதற்குச் சமமான தேர்வு எழுதிய பின்பும், CPT -க்கு பதிவு செய்து 60 நாட்களுக்குப் பிறகும் CPT எழுதலாம். வருடத்துக்கு இரண்டு முறை CPT நடத்தப்படுகிறது.

3. CPT மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பிறகு தேர்வாளர்கள் தங்கள் பெயரை `இன்டக்ரேட்டட் புரொபஷனல் கம்பீட்டன்ஸ் கோர்ஸ்'ல் (IPCC) பதிவு செய்துகொள்ள வேண்டும்.

4. சிறிஜி பதிவு செய்தபிறகு 9 மாதங்களுக்குப் பின் தேர்வாளர்கள் 35 மணி நேர `ஓரியண்டேஷன் கோர்ஸை' முடிக்க வேண்டும்.

5. பணிப் பயிற்சிக்கு (Articled Training) முன், 100 மணி நேர, தகவல் தொழில்நுட்பப் பயிற்சியை பெற வேண்டும்.

6. தேர்வாளர்கள் `குரூப்-1' (நான்கு தாள்கள்) மற்றும் `குரூப்-2' (மூன்று தாள்கள்) `இன்டக்ரேட்டட் புரொபஷனல் கம்பீட்டன்ஸ் எக்ஸாமை' (IPCE) எழுதலாம்.

7. ஏதேனும் ஒரு `குரூப்'பில் தேர்ச்சி பெற்றபின், மூன்றாண்டு `பிராக்டிக்கல் டிரெய்னிங்' (Articled training)-ல் சேர வேண்டும்.

8. ஐ.பி.சி.யின் இரண்டு `குரூப்'பிலும் சேர்ந்து தேர்ச்சி பெற்றபின், சி.ஏ. பைனல் கோர்ஸில் சேர வேண்டும்.

9. பிராக்டிக்கல் டிரெய்னிங்கின் கடைசி 12 மாதங்களில் `ஜெனரல் மானேஜ்மெண்ட் அண்ட் கம்ïனிகேஷன் ஸ்கில்ஸ்' (GMCS) (15 நாட்கள்) தேர்ச்சி பெற வேண்டும்.

10. மூன்று வருட `ஆர்ட்டிக்கிள்டு டிரெய்னிங்'கை சரிவர முடிக்க வேண்டும்.

11. `ஆர்ட்டிக்கிள்டு டிரெய்னிங்'கின் கடைசி 6 மாதங்களில் சி.ஏ. பைனல் தேர்வை எழுதலாம்.

12. சி.ஏ. பைனல், ஜி.எம்.சி.எஸ். தேர்ச்சிக்குப் பிறகு உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு ஒருவர், சார்ட்டட் அக்கவுண்டன்ட்தான்.

நமது மாணவர்கள் சி.ஏ. படிப்பில் தடுமாறுவதற்கு முக்கியக் காரணம், சரிவரப் பயிற்சியின்றித் தேர்வை எதிர்கொள்ளும் நிலையே.

இந்தத் தேர்வை பள்ளி, கல்லூரித் தேர்வுகள் போல எதிர்கொள்ளக் கூடாது. ஏனென்றால் இது முழுவதும் நடைமுறைச் செயல்பாடுகள், நிதி சார்ந்த நடைமுறையில் உள்ள பல்வேறு சட்டங்கள், அது சார்ந்த நுணுக்கங்கள் பற்றியதே. பணிப் பயிற்சி படிநிலையில் இவை அனைத்தையும் மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இந்தப் படிப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.

பட்டயக் கணக்காளர் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டியவை

1. முதலில், இந்தப் படிப்பு கடினமானது அல்ல என்பதை உணர வேண்டும். சிலை வடிக்க நாம் பயன்படுத்துவது சிற்றுளியைத்தானே?

2. சரியான, தேவையான, போதுமான புத்தகங்களை மட்டுமே மட்டும் பயன்படுத்த வேண்டும்.

3. மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதை 100 சதவீதம் கைவிட வேண்டும்.

4. ஒவ்வொரு பாடத்தையும் நடைமுறை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

5. இந்தப் படிப்பை முடித்தவுடன், நீங்கள் பிறருக்கு ஆலோசனை வழங்கப் போகிறீர்கள். எனவே ஒவ்வொரு சவாலையும் அதன் அடிவேர் வரை சென்று பார்த்து
விடுங்கள். என்ன, ஏன், எதற்கு என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களை அறிந்துகொள்ளுங்கள்.

6. தேர்வை நீங்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத முடியும். தமிழ் மட்டும் அறிந்த மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். மூன்று மாத ஆங்கிலப் பயிற்சி இதற்குப் போதுமானது. ஆனால் உங்களை நீங்கள் நன்றாகத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

சி.ஏ. படிப்பு, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். காரணம் இந்தப் படிப்புக்கு இத்தனை இடங்கள்தான் உண்டு, இடஒதுக்கீடு போன்ற சட்டதிட்டங்களும் இல்லை. நன்கொடை, பரிந்துரை எதுவும் இல்லை. உழைப்பே மந்திரம். முயற்சி வெற்றி தரும்.

இந்தப் படிப்பில் நான்கு முதல் ஐந்தாண்டு காலத்துக்குத் திட்டமிட்டுப் பயிற்சியைத் தொடங்கினால் கடைசியில் வெற்றி கை மேல் வரும்.

நூறு கோடியைத் தாண்டும் நம் நாட்டில் சி.ஏ. படித்தவர்கள் எண்ணிக்கை வெறும் 0.01 சதவீதம்தான். இவர்களில் பாதிப் பேர் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள். இப்படிப்புப் படித்தவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே சி.ஏ. படிப்பைத் தேர்வு செய்யுங்கள். வாழ்வில் நிச்சயமாக வளம் பெறுங்கள்.

www.icai.org இணையதளத்தில் பட்டயக் கணக்காளர் படிப்பைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

கட்டுரை: சார்ட்டட் அக்கவுண்டன்ட்
எஸ். செல்வக்குமார்




நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக