புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_m10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_m10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_m10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_m10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_m10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_m10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_m10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_m10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian Stretch)


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 5:32 am

ஓரு நோயை குணப்படுத்த முற்படுத்தும் போது அந்த நோயின் தன்மையையும், அந்த நோய் பீடிக்குமுன் நோயாளியின் உடல்நிலை,மனோநிலை ஆகியவற்றைக்கருத்தில் கொண்டபின் அந்தநோயைப்படிப்படியாக குறைக்க முற்படவேண்டும் என்பதாம்.

கிருமிகொல்லிகளும்(Antibiotics), விஷநாசிகாரிகளும் (Antiseptics)உடம்பிலுள்ள நோய் விளைக்கும் கிருமிகளை தாக்கி அழிக்கும் பொழுது உடம்பிலுள்ள நற்பயன் செய்யும் கலன்களையும் அழிக்கிறது, அப்படி அழிக்கும் கலன்களை எமது உடம்பிலுள்ள சிறுநீரகம்(Kidneys) மன்னீரல் (Spleen) உடன் கழிவுகளாக அகற்றிவிடும். இப்படி அழிந்த கலன்களை எமது எலும்பு மஜ்ஜை(Bone Marrow) தீவிரமாகச்செயற்பட்டு ஈடுசெய்ய முற்படும், நோயினால் பீடிக்கப்பட்டு பலவீனமான நோயாளியின் எலும்பு மஜ்ஜை ஈடுசெய்ய முடியாது செயலிழந்துவிட்டால் நோயாளிக்கு நோய் எதிற்பு சக்தி ஸ்தம்பித்து நோயாளியை ஆபத்தான நிலைக்கு தள்ளிவிடும். இதன் காரணத்தால் நோயாளிக்கு உயிர் ஆபத்து ஏற்படுகிறது.

இதன்காரணத்தாலேயே வைத்தியர்கள் நோயை தீர்க்க முயற்சிக்கும்பொழுது நோயாளியின் தகுதியையும் அவரின் உடல் நிலையையும் கருத்தில் கொண்டபின் நோய்தீற்க முற்படவேண்டும் என்று எமது வைத்திய ஆசூடங்கள் வலியுறுத்துகின்றன.

எந்த மருந்தும் நோயைக்குணப்படுத்தாது, நோயாளியின் உடம்பின் நோய் எதிற்பு சக்தி, மனோ தைரியம் ஆகியவையே அவரின் நோயைக்குணப்படுத்தும். மருந்துகள் அதற்கு உதவி செய்யுமே தவிர நோயை மருந்துகள் மாத்திரம் குணமாக்கும் என்று எண்ணிச்செயற்பட்டால் அது நோயாளிக்கு துரோகம் செய்வதாகவே கருதப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 5:33 am

எனவே திருவள்ளுவர் கூறுவதுபோல்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்செயல்


குறளுக்கு அமைய நோயின் தன்மையையும் நோயாளியின் தன்மையையும் நன்கு அவதானித்து அதற்கேற்;ப தகுதியானமருந்தை நோயளியின் நிலை, பலம் இவற்றிற்கேற்ப கொடுத்து நோயைக் குணப்படுத்துவது வைத்தியரின் தலையாய கடமை. நோய் வருவதற்கு உடம்பின் தசைகள் போதிய அப்பியாசமின்றி தளர்ந்து இறுகுவதே காரணமாகும். எனவே தினம் அப்படியாசம் செய்வதும், உடம்பிலுள்ள சக்தியை சமனப்படுத்துவதும் நோய்களைக் குணமாக்கவும் நோய்கள் வராது தடுக்கவும் பெரிதும் உதவும்.

மனித உடம்பில் சக்தி(Qi'- Energy)14 வாய்க்கால்களில் சதா ஓடியவண்ணம் இருக்கும் அப்படி ஓடியவண்ணம் இருந்தால் உடம்பில் எது நோயும் இருக்காது. இந்த வாய்க்கால்களில் எங்காவது தடை ஏற்பட்டால் தடை ஏற்ப்பட்ட இடத்திற்கு மேற்பக்கத்தில் சக்தி கூடியும் (Energy Excess) தடை இருக்கும் இடத்திற்கு கீழ்ப்பக்கத்தில் சக்தி குறைந்தும்(Energy Deficiency) இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 5:33 am

இதனால் பலவித நோய்களும் தோன்றி தடை நீடிக்குமானால் நோயும் படிப்படியாக கூடும். இந்தத்தடையை நீக்கினால் சக்தி சமனப்பட்டு நோய்கள் நீங்கிவிடும் என்பது நமது மூதாதையர்களாகிய சித்தர்களும், அகத்திமாமுனிவர் போன்ற வைத்திய வல்லுனர்களும் கண்டறிந்து கையாண்ட அபூர்வ வைத்திய முறை. இதை அவர்கள் பாமர மக்கள் மத்தியில் அவர்களுக்கு போதிய அறிவாற்றல் இல்லாத காரணத்தால் கற்றுக்கொடுக்காது ஏட்டுச்சுவடிகளில் எழுதி வைத்தனர். நம் நாட்டில் அவர்களுக்கு பின் வாழ்ந்த சில சுயநல வைத்தியர்கள் தமது பரம்பரையினர்களுக்கு மட்டும் கற்பித்து வந்த காரணத்தால் அது மக்களிடையில் பிரபல்யமாகாது அழிந்து விட்டது.

ஆனால் சீன தேசத்தவர் இதை மிகப்பிரபல்யமாக்கி ஜப்பான், கொரியா, பிரான்ஸ், பிரத்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற மேலத்திய நாடுகளிலும் மிக மதிக்கும் மருத்துவத் துறையாக்கி பல்வேறு நோய்களையும் எவரும் பிரமிக்கும்படி குணமாக்கச்செய்கின்றனர். இப்பெருமை சீனத் தேசத்தவரைச்சாரும். இந்த வைத்தியங்களாகிய குறிநிலை துழை(Acupuncture) ஏனைய குறி நிலை அழுத்துமுறை(Acupressure). பிரதிபிம்ம நிலைஅழுத்து(Reflexology) வைத்திய முறைகளில் கையாளப்படும்; சிகிச்சை முறைகளில் இந்த வர்மப்புள்ளி களில் மென்மையான ஊசிகளை குத்தி ஊக்குவித்தல்(Stimulating) அல்லது இப்புள்ளிகளை அழுத்துவதாகும்.

இந்த வர்மப்புள்ளி வாய்க்கால் நீட்டல் முறைப்படி, இந்த வாய்கால் களை நன்கு நீட்டிக்குறுக்குவதால் அவ்விடங்களில் தடைகள் ஏற்படாது, அப்படி தடைகள் ஏற்பட்டிருப்பின் அத்தடைகள் படிப்படியாக நீங்கி நோய்கள் விரைவில் குணமாகிவிடும் என்பது இந்த வர்ம ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை(Energy Meridian Stretch) அப்பியாசமாகும். இதை தினந்தினம் பயிர்ச்சித்தால் நோயின்றி வாழலாம். சகல நோய்களும் படிப்படியாக குணமாகிவிடும். தினந்தினம் செய்ய முடியாதவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்களாவது செய்தால் நோயின்றி வாழ முடியும். நோய்கள் விரைவில் குணமாகும். இது அனுபவத்தில் கண்ட உண்மை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 5:55 am

1 சுவாச கோச வாய்க்கால் நீட்டல் (The Lung Ch. Meridian Stretch).

ஓரிடத்தில் நிமிர்ந்து நிற்கவும். இரண்டு கைகளையும் பின்புறமாக கோர்த்து பிடரியில் அழுத்திப்பிடிக்கவும். கைகளின் இருபெருவிரல்களையும் பிடரியின் இருபக்கமும், காதுக்குக்கு பின் இருக்கும் புடைப்புக்களுக்கு இருபக்கமும் வைத்து அழுத்திக்கொள்ளவும். இப்போ வாயைமூடி மூக்கால் மூச்சை உள் இழுத்தபடியே காலையோ,முதுகையோ வளைக்காது பிணைத்த கைகளை பிடரியில் அழுத்தியபடியே உடம்பின் மேற்பாகத்தை வலப்புறம் இயலுமானவரை திருப்பவும்.

இப்படித்திரும்பும் பொழுது இடக்கால் மடியாது பாதம் மட்டும் சற்று தரையை விட்டு உயரலாம். இதன்பின் சுயநிலைக்கு வரவும். இப்படி வரும் போது மூக்கால் மூச்சைவெளி விடலாம். இப்படி நின்று பின் மீண்டும் மூக்கால் மூச்சை நன்கு உள் இழுத்தபடி இடப்பக்கம் திரும்பவும், திரும்பும் பொழுது வலது கால் மடியாது பாதம்மட்டும் சற்று தரையைவிட்டு உயரலாம். அப்படித் திரும்பிப்பின் சுயநிலைக்கு வந்து நிமிர்ந்து நிற்கவும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யவும்.

இதனால் இந்த வாய்க்காலில் ஏற்பட்ட தடைநீங்கும். சுவாசப்பை பலப்படும், இதன் இணை வாய்க்காலாகிய பெருங்குடல் அவ்வாய்க்கால்கள் செல்லும் பாதையின் இருமருங்கும் உள்ள உறுப்புக்களில் ஏற்பட்ட நோய்கள், சுவாசப்பை நோய்கள்(Lung Diseases), பெருங்குடல் நோய்கள்(Colonic Diseases) விரைவில் குணமாகும். இந்த உறுப்புக்களும் புத்துயிர்பெற்று நல்ல நிலையில் இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 5:57 am

2 .பெருங்குடல் வாய்க்கால் நிட்டல்(Large Intestine Ch.Meridian Stretch)

இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி இருகாதுகளுடனும் சேர்த்து தலைக்குமேல் ஒன்றுடன் ஒன்றைப்பிணைத்து வைத்துக்கொள்ளவும். உடம்போ,கால்களோ வளையக்கூடாது. நிமிர்து நிற்கவும். வாயைமூடி மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். இப்போ தலையைச்சற்று நிமிர்த்தி மேலே கோர்த்திருக்கும் உள்ளங்கையைப் பார்த்தபடியே உடம்பின் மேற்பாகத்தை முதலில் வலப்புறமும், பின் இடப்புறமும் வழைக்கவும். வழையும்பொழுது மூக்கால் மூச்சை வேளிவிடலாம். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யவும், இதனால் பெருங்குடல் வாய்க்காலில் ஏற்பட்ட தடை நீங்கும். பெருங்குடல் வாய்க்கால் பலப்படும் அதன் சோடிவாய்க்கால் சுவாசப்பை ஆவன பலப்படும் அவற்றில் காணும் நோய்கள் குணமாகும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:00 am

3. இரைப்பை வாய்க்கால் நீட்டல் (Stomach Ch.Meridian Stretch)

நிமிர்ந்து நேராக நிற்கவும். தலையையும் உடம்பையும் நேராக வைத்துக்கொள்ளவும். இப்போது வாயை மூடி மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். இதன்பின் வலது உள்ளங்கையை நீட்டி வெளியே திருப்பியபடி முன்பக்கம் இயலுமானவரை நீட்டவும். முன்பக்கம் வரும் எதையோ தடுக்க முயல்வது போல் கை நீட்டப்பட வேண்டும். உடம்பைச்சற்று முன்பக்கம் சரியவும். இடது காலை முழங்கால் வரை மடித்து இடது கையை பின்பக்கம் நீட்டி இடது கால் பெருவிரலைப் பிடித்துக்கொள்ளவும்.



இப்படி சிலவிநாடிகள் நின்றுபின் சுயநிலைக்கு வந்து நிமிர்ந்து நின்று பின் இடது கையை முன்பக்கம் முன்போல் நீட்டி வலது காலை பின்பக்கம் நீட்டி வலது கையால் வலது கால் பெருவிரலை பிடித்து நிற்கவும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யலாம். இதனால் வயிற்று வாய்க்காலில் ஏற்பட்ட தடை நீங்கும்,வயிறு பலப்படும் .ஜீரணசக்தி கூடும். வயிற்றில் உள்ள அல்சர் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும். வயிற்றில் ஏற்படும் உப்பிசம் நீங்கும். வயிற்றில் அதிகவாய்வு சேர்க்கை குணமாகும். இந்தவாய்க்காலுக்கு சொந்தமான இரைப்பை அதன் சோடிவாய்க்கால் மண்ணீரல் பலப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:03 am

4.மண்ணீரல் வாய்க்கால் நீட்டல் (Spleen Channel Meridian Stretch)

ஒரு விரிப்பில் கால்களை மடித்து அமரவும் இரு கால்களும் மடிந்து பீடங்களுக்கு (Buttocks) கீழ் இருக்கவேண்டும். முழங்கால்கள் முன்மடிந்து இருக்கும். இப்போ வாயை நன்கு மூடி மூக்கால் மூச்சை உள் இழுக்கவும். இப்போ இரு கைகளையும் பின்பக்கம் உள்ளங்கை நிலத்தில் படும்படி விரல்கள் பின்நோக்கி இருக்கும்படி வைக்கவும். உடம்பை வளைக்காது தலையைக் கழுத்துடன் பின்புறம் இயலுமானவரை கொண்டுசெல்லவும். மடித்தகால் தரையுடன் இருத்தல் அவசியம். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யவும். இதனால் மண்ணிரல் வாய்க்காலில் ஏற்பட்ட தடை நீங்கும், மண்ணீரல் பலப்படும். இந்த அப்பியாசத்தால் உடம்பிலுள்ள சகல நிணநீர் கோழங்களும் நன்கு செயற்படும். உடம்பின் நோயை எதிற்கும் சக்தி(Immune system of the body) நன்கு செயற்பட்டு வீக்கங்கள், எடைகூடல், தோள்வலி, கழுத்துவலி போன்ற நோய்கள் நீங்கும். இணை வாய்க்கால் இரப்பை வாய்க்காலும் பலப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:24 am

5.சிறுகுடல் வாய்க்கால் நீட்டல் (Small Intestine Meridian Stretch)

ஒர் விரிப்பில் நிமிர்ந்து அமரவும். கால்களை ஒன்றுக்கு மேல் ஒன்று வைத்துக் கொள்ளலாம், வலது கையை தோழுக்கு மேலே பின்புறமாக மடித்து முதுகின் நடு பாகத்திற்கு கொண்டு செல்லவும். இப்போது இடது கையையும் இடது பக்கத்து தோழுக்கு கீழ் பக்கம் மடித்து முதுகின் பின்புறம் கொண்டு சென்று வலது கையின் பெருவிரலை பிடிக்க முயலவும், ஆரம்பத்தில் சற்று சிரமம் ஆனால் சில நாட்கள் முயன்றால் சாத்தியமாகும் இப்பயிற்சியால் சிறுகுடல் வாய்க்காலில் ஏற்பட்ட தடை நீங்கும். சிறுகுடல் பலப்படும் தோழில் வரும் வலிகள் நீங்கும். முதுகு வலியும் நீங்கும். சகல வயிற்றுக்கோழாறுகளும் நீங்கும். இதன்சோடி வாய்க்காலான இருதயமும் பலப்படும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:27 am

6.இருதய வாய்க்கால் நீட்டல் (The Heart Channel Meridian Stretch)

ஓர் விரிப்பில் நிமிர்ந்து அமரவும். கால்களை நன்கு நீட்டி ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ளவும். கால்களை முழங்கால் அளவில் மடித்து வைத்திருக்கவும். வாயை நன்கு மூடி மூக்கால் மூச்சை உள் இழுக்கவும். உள்ளே மடிந்த கால்களும் உள்ளங்கால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று முட்டியபடி இருக்க வேண்டும். இருமருங்கு முழங்கால்களும் சற்றுத் தூக்கியபடி இருக்கும். இப்போது இருகைகளாலும் ஒன்றுடன் உன்று இறுகப்பிடித்து வைத்திருக்கும் இரு கால் பெரு விரல்களையும் பிடித்தபடியே முன் வளையும் பொழுது மூச்சை படிப்படியாக மூக்கால் வெளியே விடவும். இரு முழங்கைகளும் மடிந்த இரு முழங்கால்களையும் வெளிப்புறம் தள்ளியபடி இருக்கும். மடியும் பொழுது மூக்கால் மூச்சை வெளியே விடலாம். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யலாம். இதனால் இருதய வாய்க்காலில் ஏற்பட்ட தடை நீங்கி இருதயம் பலப்படும். பிரிமென்தகடு(Diaphragm) பலப்படும். சுவாச நோய்கள், நெஞ்சில் சளிப்பிடித்தல் முதலியன நீங்கும். சோடிவாய்க்கால் சிறுகுடல் பலப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:29 am

7. சலப்பை வாய்க்கால் நீட்டல் (Urinary Bladder Meridian Stretch)

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். கால்களை நன்கு நீட்டி கால் பெருவிரலை மறுகால் பெருவிரலுடன் நன்கு இறுக அழுத்திப் பிடித்துக்கொள்ளவும் .குதிக்காலையும் குதிக்காலுடன் சேர்த்துப் பிடித்துக்கொள்ளவும். இப்போது வாயை மூடி மூக்கால் மூச்சை உள் இழுத்தபடி கைகளை முன்பக்கம் நீட்டி முன்பக்கம் வளையவும். வளையும் பொழுது மூச்சை படிப்படியாக மூக்கால் வெளியே விட்டபடி இரு ககைகளாலும் கால் பெருவிரல்களைப்பிடிக்க முயலவும். ஆரம்பத்தில் சற்று கஷ்டம் ஆனால் நாளடைவில் சுலபமாகிவிடும்.

இந்த அப்பியாசத்தால் சலப்பை வாய்க்காலில் ஏற்பட்ட தடை நீங்கி, சலப்பை பலப்படும். நீரொழுக்கு, சலப்பை தளர்ச்சி முதலியன குணமாகும். சலம் சம்மந்தமான நோய்கள் நீங்கும் .இதன் சோடிவாய்க்கால் உண்டிக்காய் பலப்படும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக