புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
48 Posts - 45%
heezulia
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 3%
jairam
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
2 Posts - 2%
சிவா
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
Manimegala
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
14 Posts - 4%
prajai
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
6 Posts - 2%
jairam
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கிச்சன் டிப்ஸ் Poll_c10கிச்சன் டிப்ஸ் Poll_m10கிச்சன் டிப்ஸ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிச்சன் டிப்ஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:25 pm

* பிஸ்கட்டுகள் நமுத்துப் போகாமல் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரை போட்டு, மூட்டை போல் கட்டி, பிஸ்கட் டப்பாவில் போட்டு விடுங்கள்.

* பேகான் ஸ்பிரே பாட்டிலுக்குள், ஊதுபத்தியை போட்டு எடுத்து, ஏற்றி வைத்தால், கொசுக்கள், பூச்சிகள் அண்டாது.

* சர்க்கரையுடன் ஒன்றிரண்டு கிராம்புத் துண்டுகள் போட்டால், எறும்பு வராது.

* கறிவேப்பிலை இலைகளை அரிசியுடன் போட்டு வைத்தால், பூச்சிகள், வண்டுகள் எட்டிக் கூட பார்க்காது.

* வெயில் காலத்தில் பால் திரிந்து போகாமல் இருக்க, பாலுடன் நான்கைந்து நெல் விதைகளைப் போட்டு வைக்கலாம்.

* வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது.

* பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால், தோலை எளிதில் உரிக்கலாம்.

* பூண்டை எளிதில் உரிக்க இன்னொரு ஐடியா. பூண்டில் தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் அரைத்தால், தோல் அனைத்தும் மேலே எழும்பி, ஜாரின் மேற் புறத்தில் ஒட்டிக் கொள்ளும். கீழே உரித்த பூண்டு, மையாய் அரைந்திருக்கும். ஒரே நேரத்தில் இரு வேலை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:02 am

* சாம்பார், வற்றல் குழம்பு ஆகியவற்றில் காரம் அதிகமாகி விட்டால், நல்லெண்ணெயை ஊற்றி கொஞ்சம் கொதிக்க விடுங் கள். காரம் குறைந்து விடும், குழம்பின் வாசனையும் நன்றாக இருக்கும். ஆனால், குருமா போன்ற கிரேவியான ஐட்டங்களில் காரம் கூடினால், ஒரு ஸ்பூன் வெண் ணெய் போட்டு கொதிக்க வையுங் கள். காரம் குறைந்துவிடும்.

* குழம்பில் புளி அதிகமாகி விட்டால், சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை உடனே சரியாகி விடும்.

* சாம்பாரில் சில சமயம் பருப்பு சேராமல் நீர்க்க இருக்கும். அப் போது துவரம்பருப்பு சிறிது எடுத்து மிக்சியில் அரைத்து சாம்பாரில் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். சாம்பார் கெட்டியாகிவிடும். அரிசி மாவு கரைத்து விடுவதை விட, இவ்வாறு செய்வது சாம்பாரின் ருசியை அதிகரிக்கும்.

* ரோஸ்ட் செய்யும் கறிகளில், எண்ணெய் அதிகமாகிவிட்டால், கறிகளின் மேல் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை தூவினால், கறியின் எண்ணெயை அரிசிமாவு உறிஞ்சிக் கொண்டு விடும்; கறியும் மொறு மொறுப்பாக இருக்கும். கடலை மாவும் தூவலாம். ஆனால், கடலை மாவு சுவையை கூட்டினாலும் கறிகளுக்கு மொறுமொறுப்பை தராது.

* பாயசம் நீர்த்துவிட்டால் எந்த பாயசமாக இருந்தாலும் சரி இரண்டு டீஸ்பூன் சோள மாவு அல்லது பால் பவுடர் (ப்ளெயின்) கரைத்து பாயசத்தில் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டால் பாயசம் கெட்டியாகிவிடும்.

* சாதம் வேகாமல் நறுக்கரிசியாக இருந்தால், சாதத்தின் மேல் சிறிது தண்ணீரை தெளித்து குக்கரில் வைக்கவும். ஆவி வந்ததும், "வெயிட்' போட்டு உடன் அணைத்து விடவும். சத்தம் அடங்கியவுடன் குக்கரை திறந்தால் சாதம் பூவாக வெந்து இருக்கும்.

* சில சமயங்களில் தண்ணீர் நன்றாக இல்லாவிட்டால், சாதம் நிறம் சற்று மங்கலாக இருக்கும். அப்போது அரிசி களைந்து குக்கரில் வைக்கும் போது சில சொட்டு எலுமிச்சை சாறு விட்டு வைத்தால், சாதம் பொலபொலவென்றும் வெண்மையாகவும் இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:03 am

* ரசத்தில் புளி குறைந்துவிட்டால், கைவசம் மாங்காய் பொடி இருந்தால் போதும். 1/4 டீஸ்பூன் பொடி தேவையான புளிப்பை தந்து விடும்.

* தோசைமாவு, இட்லி மாவு மிகவும் புளித்துவிட்டால், ஒரு டம்ளர் பால் ஊற்றினால் போதும் புளிப்பை போக்கிவிடும்.

* வாங்கி சில நாட்கள் ஆகிவிட்ட காலிபிளவர், முள்ளங்கி, முட்டைகோஸ், டர்னிப் ஆகியவை செய்யும் போது மிகவும் சகிக்க முடியாத வாடை ஏற்படும். இதை தவிர்க்க, சிறிது எலுமிச்சை சாறும், சர்க்கரையும் கலந்து சமைத் தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

* தயிர் பச்சடி நீர்த்துப் போய்விட்டால், சிறிது நிலக்கடலை யை வறுத்து நைசாக பொடி செய்து கலந்துவிடலாம். இதனால், பச்சடி கெட்டியாவதோடு சுவையும், சத்தும் கூடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:04 am

* கேரட், பீட்ரூட், முள்ளங்கி ஆகியவை உடலுக்கு அதிகம் நன் மை பயப்பவை. இவற்றில் தோ லை அரிந்து எறிந்து விடக்கூடாது. தோலுடன் சமைப்பதே சிறந்த முறை.


* கீரை வகைகள் வேகும் போது அதிலிருந்து ஒரு வித நச்சுக் காற்று வெளியேறும். எனவே, வேகும் போது மூடி போட்டு மூடக் கூடாது. அவ்வாறு மூடினால் நச்சுக் காற்று கீரையிலேயே தங்கி உடலுக்கு கெடுதியை உண்டு பண்ணும்.


* அரிசி, தானிய வகைகளை அதிகளவில் நீரில் கழுவக் கூடாது. அதிலுள்ள தாதுக்கள், வைட்டமின்கள் தண்ணீரில் கரைந்து விடும்.


* தக்காளி சூப் செய்து நீண்ட நேரம் வைத்திருந்தால், அது அமிலத் தன்மை உடையதாக மாறிவிடும். இதை தடுக்க சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடாமாவு சேர்க்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:25 am

*பருப்புகளை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

* உருளைக்கிழங்கை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது மஞ்சள், எண்ணெய் சேர்த்து, வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

* பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

* பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

* உளுத்தம் பருப்பை வடைக்கு ஊற வைக்கும்போது, ஒரு மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும். அதிக நேரம் ஊற வைத்தால், நிறைய எண்ணெய் உறிஞ்சும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:26 am

* சிறு துண்டு பெருங்காய கட்டியை மஞ்சள் மற்றும் மிளகாய் தூளுடன் போட்டு வைத்தால் பூச்சுகள் வராது.

* சர்க்கரை டப்பாவில் மூன்று அல்லது நான்கு கிராம்பை போட்டு வைத்தால் எறும்பு வராது.

* சர்க்கரை டப்பாவை சுற்றி மஞ்சள் பொடி தூவி வைத்தால், எறும்பு வராது. அல்லது பெருங்காயத் துண்டுகள் உள்ள டப்பாவின் மேல் சர்க்கரை டப்பாவை வைத்தால் எறும்பு வராது.

* தேன் பாட்டிலில் இரண்டு மிளகை போட்டு வைத்தால் எறும்பு வரவே வராது.

* ரவையில் பூச்சி வராமல் தடுக்க ஆறு அல்லது ஏழு கிராம்புகளை போட்டு வைக்க வேண்டும்.

* அரிசியில் சிறிது போரிக் பவுடரை போட்டு வைப்பதன் மூலம் பூச்சி வருவதை தவிர்க்கலாம்.

* புதினாவை காய வைத்து, அதை பவுடராக்கி, 10 கிலோ அரிசிக்கு 50கிராம் பவுடரை போட்டு வைத்தால் புழு, வண்டு வராது. இது பூச்சி வருவதை தடுப்பது மட்டுமின்றி உணவின் சுவையையும் கூட்டும்.

* பூண்டை உரிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், குளிர்ந்த நீரில் போட்டு ஊற வைத்து, அதன்பின் தோலை உரித்தால் எளிதில் வந்து விடும். அல்லது தனித்தனி பல்லாக எடுத்துக் கொண்டு, வெறும் வாணலியில் நன்றாக வதக்கி விட்டு உரித்தால், சுலபமாக உரிக்கலாம்.

* பச்சைநிற காய்கறிகள் நிறம் மாறா மலிருக்க, சமைக்கும் போது ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து சமைக்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:26 am

* ஊறுகாயில் பூஞ்சை படர்வதை தடுக்க, எண்ணெயை நன்றாக கொதிக்க வைத்து, ஆறிய பின் ஊற்ற வேண்டும்.

* கேக்கில் முட்டை சேர்த்து செய்யும் போது, முட்டை வாடை அடிக்கும். கேக் மாவுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து செய்தால் வாடை இருக்காது.



* புதிய பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை எடுக்க, பாத்திரத்தை சிறிது சூடாக்கி, பின் ஸ்டிக்கரை எடுத்தால் எளிதில் வந்துவிடும். அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் மூலமும் ஸ்டிக்கரை எடுத்துவிடலாம்.

* சட்னியில் உப்பு அதிகமாகி விட்டால், உருளை கிழங்கை இரண்டாக வெட்டி அதில் போட்டால் உப்பை எடுத்துவிடும்.

* காலி பிளவர் சமைக்கும் போது, அதனுடன் சிறிது பால் அல்லது பால் பவுடர் சேர்த்து சமைத்தால் வெண்மை நிறம் மாறாது.

* பெருங்காயத்தை சம அளவு சாதாரண உப்புடன் கலந்து வைத்தால், அது பிரஷ்ஷாக இருக்கும்.

* முட்டை வெகு நாட்கள் கெடாமல் இருக்க, எலுமிச்சை பழசாறு கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.

* வெந்நீரில் போட்டு வைத்து, பின், எலுமிச்சை பழத்தை பிழிந்தால், அதிக அளவில் சாறு கிடைக்கும்.

* கையில் பட்ட கெரசின் வாடை போக, கடலை மாவினால் கையை கழுவ வேண்டும்.

* பூண்டு அல்லது மீன் வாடை போக, உப்பு தண்ணீரில் கையை கழுவிவிட்டு, பின் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் .

* இட்லி மாவு புளிக்காமல் இருக்க, மாவில் சிறிய துண்டு வாழை இலையை போட்டு வையுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:56 am

* காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போன காய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.

* காய்கறிகள் வாடிப் போய் விட்டால் கவலை வேண்டாம். பிரிஜ்ஜிலிருந்து ஜில்லென்ற தண்ணீரை எடுத்து, அதில், சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த தண்ணீரில் வாடிய காய்கறிகளைப் போட்டு வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அவற்றை எடுத் தால், அப்போது தான் வாங்கியது போன்று புத்தம் புதிதாய் தோற்றமளிக்கும்.

* பச்சை குடைமிளகாய் சில நேரம் காரமாக இருக்கும். அந்த காரத்தை போக்குவதற்கு, விதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு, அதை சாம்பாரில் போடவோ, கறியாக வதக்கவோ செய்யலாம். புளிச்சாறு அல்லது மோரில் ஊறவைத்து சமைத்தாலும், காரம் தணிந்து விடும்.


* சிலர் பாகற்காயை வெட்டிய பின் வேக வைத்து, அந்த தண்ணீரை கொட்டி விடுவர். இவ்வாறு செய்தால், பாகற்காயிலுள்ள சத்து வீணாகி விடும். அதற்கு பதில், பாகற்காயின் மேல் முள்ளை லேசாக நீக்கிவிட்டு, இரண்டாகப் பிளந்து, பாகற்காயின் உள்ளேயும், வெளியேயும் சிறிது உப்பையும், மஞ்சள் பொடியையும் தடவி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின், அதை கழுவி உபயோகித்தால், கசப்பு குறைந்திருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:57 am

* சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை உபயோகித்தால், மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.

* பெருங்காயம் கல் போன்று இருந்தால், உடைப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். எனவே, வெறும் கடாயை அடுப்பில் வைத்து, காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதை கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து போட்டு விட்டால், தனித் தனியாக, ஆறியவுடன் டப்பியில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

* காலிபிளவர், முள்ளங்கி, டர்னிப், முட்டைகோஸ் ஆகியவற்றை வாங்கி சில நாட்களுக்கு பின் சமைத்தால், சகிக்க முடியாத வாடை ஏற்படும். இதை தவிர்க்க, சிறிது எலுமிச்சை சாற்றையும், சர்க்கரையையும் கலந்து சமைக்க வேண்டும். அவ்வாறு சமைத்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.


* காலிபிளவரை, சமைப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன், இலைகளை நீக்கிவிட்டு, ஒரு பிடி உப்பு கலந்த நீரில், குடை மாதிரி அமிழ்ந்திருக் கும்படி, வைக்க வேண்டும். இப்படி செய்தால், கண்ணுக்கு எளிதில் தெரியாத பூச்சிகள் அனைத்தும் நீரில் மிதந்து வரும். அதன் பின் காலிபிளவரை எடுத்து, நல்ல தண்ணீரில் கழுவி விட்டு உபயோகிக்கவும்.

* சில கத்திரிக்காய்கள் கடுப்பு குணம் கொண்டு இருக்கும். சிறிது சுண்ணாம்பு கலந்த நீரில், நறுக்கிய கத்திரிக்காய்களை, சிறிது நேரம் போட்டு வைத்து, பிறகு கழுவி உபயோகித்தால், கத்திரிக்காயின் கடுப்பு தன்மை போய்விடும்.


* தோசை சுடும்போது, தோசை கல்லிலிருந்து தோசை எடுக்க வராமல் ஒட்டிக் கொள்ளும். அத்தகைய சமயங்களில், ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி, தோசை கல்லில் ஒவ்வொரு முறையும் தோசை வார்ப்பதற்கு முன் தேய்த்தால், சுலபமாக தோசை எடுக்க வரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:17 am

* வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.

* சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு, அதை பிரிஜ்ஜில் 2, 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.

* பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் மிளகாயுடன் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை போட்டு, இறுக மூடி வைக்க வேண்டும்.

* பயறு வகைகளை வாங்கியதும், அவற்றை வெறும் கடாயில் போட்டு, லேசாக சூடாக்க வேண்டும். அதன் பின், டப்பாவில் போட்டு வைத்தால், பூச்சி பிடிக்காது.

* பருப்பு ரசம் செய்றீங்களா? இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி, ரசம் நுரைத்து வரும் போது போடுங்கள். அதன் சுவை சூப்பராக இருக்கும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக