புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_m10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10 
65 Posts - 50%
heezulia
தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_m10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_m10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_m10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_m10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_m10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_m10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_m10தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் Poll_c10 
6 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 15 Apr 2018 - 12:47

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா மீது இன்று அதிகாலை முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன.
பல வருடங்களாக சிரியாவை பகடைக்காயாக பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே புகைந்துகொண்டிருந்த பனிப்போர் இன்று முதல் நெருப்பை கக்க தொடங்கிவிட்டது.
தற்போதைய நிலவரப்படி சிரியாவின் நிலைமை மீண்டும் பழையபடி திரும்பி வர முடியாத எல்லைக்கு சென்று விட்டது என்பதே நிதர்சனமான உண்மை.

தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் K0EB2m6SMGVcH39RELZm+b4975539ad86202692a53f33f89cad50
இரண்டாம் உலகப்போரின் வெற்றிக்கு பிறகு தொடங்கிய இந்தப் பனிப்போர், சோவியத் ஒன்றிய நாடுகளை ஓரணியாகவும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை இன்னொரு அணியாகவும் பார்க்கும் மனப்பான்மையில் செயல்பட தொடங்கியுள்ளது.
நன்றி
லங்கஸ்ரீ

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 15 Apr 2018 - 12:49

இதன் ஒருபகுதியாக சிரியாவை மையமாக வைத்து இவர்கள் தங்களுக்குள் மறைமுகமாக போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுருக்கமாக சொல்லப்போனால், சிரியாவின் அதிபர் ஆதரவுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போர் தற்போது மூன்றாம் உலகப்போர் எனும் நிலையை எட்டியுள்ளது.
தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் 4cPT7NTNSciTGcLxAo3z+cc9e489a50d17d6fe78c96c0d58bc6c8

அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற உலக நாடுகளின் தலையீடு சிரியா உள்நாட்டு போரில் முக்கிய விடயங்களாக அமைந்தன.
அதிபரின் ஆதரவு மற்றும் எதிர் படைகளுக்கு, இந்நாடுகள் அளித்த ராணுவ, பொருளாதார, அரசியல் உதவிகள் இப்போர் தீவிரமடையவும், தொடரவும் வழிவகுத்தன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 15 Apr 2018 - 12:51

இது பிற்காலத்தில், சிரியாவை ஒரு போர்க்களமாக மாற்றியது.
நாட்டில் பெரும்பான்மையில் உள்ள சன்னி பிரிவு இஸ்லாமியர்களை அதிபரின் ஷியா அலாவித் பிரிவுக்கு எதிராக தூண்டிவிட்டு, பிரிவினைவாதத்தை உருவாக்குவதாக வெளிநாட்டு சக்திகள்மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் BRBeHTxdTICbgWH43Yw5+893872015f62db0a272d52ba9b37a9e0
அரபு நாடுகளில் இரானின் மிகவும் நெருங்கிய கூட்டாளியாக அதிபர் அசாத் உள்ளார். இரானின் ஆயுத தளவாடங்களை ஷியா இஸ்லாமிய அமைப்பான ஹெஸ்புல்லாஹ்விற்கு அனுப்பும் முக்கிய புள்ளியாக சிரியா உள்ளது. இந்த அமைப்பு சிரியா அரசின் வீரர்களுக்கு உதவ ஆயிரக்கணக்கான வீரர்களை போருக்கு அனுப்பியுள்ளது.
ஹெஸ்புல்லா அமைப்பினர் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வைத்துள்ளதால் அதிகம் கவலை அடைந்த இஸ்ரேல், சிரியா மீது பல்வேறு வான் வழி ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்காவின் ஆதரவு இல்லாமலே நடத்தி வந்தது.
ஷியா பிரிவின் ஆட்சியில் உள்ள இரான் அரசு ஒரு ஆண்டில் பல பில்லியன் டாலர்களை அலாவித் ஆதரவு அரசை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களை முறியடிக்க அளிப்பதாக நம்பப்படுகிறது. இதன்மூலம், அவர்களுக்கு அரசியல் ஆலோசனை, மானிய விலையில் ஆயுதங்கள் எண்ணெய் பரிமாற்றங்கள் ஆகியவை செய்வதாக நம்பப்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 15 Apr 2018 - 12:55

இந்நிலையில் சன்னி பிரிவு இஸ்லாமியர்களின் ஆட்சியில் உள்ள சௌதி அரேபியாவும், ஈரானின் ஊடுருவலுக்கு பதிலடி கொடுக்க முயன்று வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்நாடும் பெரிய விநியோகம் செய்துவருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் சிரியாவில் 14 பில்லியன் டொலர் பணத்தை ராணுவ தாக்குதலுக்காக அமெரிக்கா செலவிட்டுள்ளது. அப்படியெனில் நாள் ஒன்றுக்கு 15 மில்லியன் டொலர் பணத்தை அமெரிக்க செலவிட்டுள்ளது.
தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் QOgmP6LOQK0y8vTurSWQ+99dc5c9f8ee5210dcb197e672e3a77b1
இவ்வாறாக பல ஆண்டுகளாக தொடர்ந்த இந்த போரின் இறுதிகட்டமாக, கடந்த 7ந்தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் அந்நகரை முற்றுகையிட்டன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 15 Apr 2018 - 12:56

அப்போது டமாஸ்கஸில் சந்தேகத்திற்குரிய தாக்குதல் நடைபெற்றது. அதில் 180க்கும் அதிகமானோர் பலியாகினர். ஹெலிகாப்டர் ஒன்றில் இருந்து சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க குற்றச்சாட்டு தெரிவித்தது.
இது குறித்து அப்போது பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க தவறி ரஷியா தோல்வி அடைந்து விட்டது. இந்தத் தாக்குதல்கள் ஒரு மனிதர் நடத்தும் தாக்குதல்கள் அல்ல.
இது ஓர் அசுரனின் தாக்குதல் என்றும், சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்தை அவர் விமர்சித்து இனி சிரியா மீது தாக்குதல்கள் பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.
டொனால்ட் ட்ரம்ப் கூறியபடியே இன்று சிரியாவில் ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீதும், ராணுவ ஆயுத கிடங்குகளின் மீதும் அமெரிக்க கூட்டு படைகளால் குண்டு வீசி நள்ளிரவுமுதல் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 15 Apr 2018 - 12:57

ரஷ்யாவின் ஆதரவோடு இருக்கும் சிரியா அரசை கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் இந்த தாக்குதலை தொடங்கியுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப், தெரசா மே, இம்மானுவேல் மக்ரான் ஆகியோர் இன்று நடைபெறும் தாக்குதல்கள் இன்னும் தீவிரமடையும் என தெரிவித்திருப்பது சிரியாவை காரணம் காட்டி ரஷ்யாவிற்கு எதிரான உலகப் போரை இவர்கள் தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.

தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் YHAoew6DQQO4CNhNplhL+6e950fcfc1342ad2fbe936b9ffc2beef
இந்த தாக்குதல் மூலம் இருபெரும் ஆபத்துக்கள் நிகழ வாய்ப்பு உள்ளது, முதலாவது இதுவரை மறைமுக பனிப்போரில் மட்டுமே ஈடுபட்டுவந்த அமெரிக்கா மற்றும் ரஷ்யா இனி நேரடி ராணுவ மோதலை தொடங்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை அப்படி நடந்தால் அதனால் ஏற்படும் சேதங்கள் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் இருக்கும். ஏனெனில் இரண்டு நாடுகளும் அதிநவீன அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளாகும்.
ஈராக்கில் சதாம் உசேன், லிபியாவில் கடாபி ஆகியோருக்கு நேர்ந்த கதி சிரியாவில் தனக்கு ஏற்பட்டு விட கூடாது எனும் முன்னெச்சரிக்கையில் சிரிய அதிபர் அசாத்தின் படைகள் ஏற்கனவே அவர்களின் பொருள், சொத்துக்கள் மற்றும் ஆயுதங்களை ரஷ்யாவின் கடலோரப் ராணுவ தளங்களான லடகியா மற்றும் டார்ட்டஸில் பகுதிகளில் பாதுகாப்பாக இடம் மாற்றிவிட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 15 Apr 2018 - 12:59

இதனை தாக்கி அழிக்க அமெரிக்கா முயன்றால் அது ரஷ்ய நாட்டை தாக்கியதற்கு சமமாகும், அவ்வாறு நடந்தால் ரஷ்யாவும் பதிலுக்கு அமெரிக்கா மீது தாக்குதல் தொடுக்கும்.
இரண்டாவது பெரிய ஆபத்தானது, வடகிழக்கு பிராந்தியத்தில் சிரியாவுக்கு ராணுவ உதவி அளித்து வரும் ஈரான் நாட்டுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாகவும், தன்னை வீழ்த்த நினைக்கும் ரஷ்யாவிற்கு தனது உண்மையான ராணுவ பலத்தையும் நவீன ஆயுதங்களையும் போர்களத்தில் பயன்படுத்தி தான் யார் என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்திலும் அமெரிக்கா உள்ளது.
எனவே அவ்வாறு அமெரிக்கா தனது ராணுவ பலத்தை வெளிப்படுத்தினால் சிரியா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றொரு அணியாகவும் சேர்ந்து மூன்றாம் உலகப்போரைத் தொடங்கி வைக்கும்.
இதன் பின்னர் சில நாட்களில் துருக்கி, இஸ்ரேல், சவுதி அரேபியா எனும் அடுத்த கட்ட நாடுகள் இந்த அணிகளில் இணைந்து ஒரு முடிவில்லா போருக்கு நம்மை இட்டுச்செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள் NuMMS8QgRCyORY88bL1T+9ec77423f303f6983ba429fae8abd545

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 15 Apr 2018 - 13:05

உலகப்போர் மூளும் அபாயம்: தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா.. உலக நாடுகள் அதிர்ச்சிக்குள்ளாக நடந்தேறிக்கொண்டிருக்கும் நிகழ்வு..?:
சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியதன் காரணமாக சிரியாவில் அமெரிக்கா-ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன்-பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்க, சிரியா மீது தாக்குதல் நடத்த அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளளார்.
அதைத் தொடர்ந்து தாக்குதல்கள் தொடங்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிபடுத்தி உள்ளன.
சிரிய உள்நாட்டுப் போர் துனீசியப் புரட்சியின் தாக்கத்தால் அராபிய நாடுகளில் எழுந்த தொடர் போராட்டங்களின் அங்கமாக 2011 முதல் நடைபெற்றுவருகிறது.
2018 ஆம் ஆண்டில் உக்கிரமடைந்து உச்ச கட்ட நிலையை எட்டியுள்ளது. சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது ரஷியாவால் ஆதரிக்கப்படும் சிரியா அரசுப் படைகள் பிப்ரவரி மாதம் முதல் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 121 பேர் குழந்தைகள் என பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான "சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்" அமைப்பு கூறியுள்ளது.
இந்த நிலையில், சிரியாவில் ராசாயன தாக்குதலை ரஷ்யாவும், ஈரானும் அரங்கேற்றி வருகின்றன. இதனை தடுக்க வேண்டும் என்று கூறி, சிரியாவின் முக்கிய நகரான டமாஸ்கஸ் மீது தாக்குதலை துவக்கிவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தி குறிப்பு உறுதி செய்துள்ளது.
இந்த வான் தாக்குதலில் பிரிட்டன்,பிரான்ஸ், நாடுகள் பங்கேற்றுள்ளன. தாக்குதலையடுத்து சிரியாநகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நன்றி
செய்தி புனல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக